பெட்டாலிங் ஜெயா, ஜூலை 13 :
நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவின் போது (MCO) அம்னோ தலைவர் அமாட் ஜாஹிட் ஹமிடி மற்றும் பிற அரசியல் பிரமுகர்கள் ஒன்றாக உணவருந்தியதாக மத்திய அமைச்சர் அனுவார் மூசா இச்செயலில் SOP மீறப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றிரவு (ஜூலை 12) தனது டுவீட்டர் வலைத்தளத்தில் ஓர் டுவீட்டில் இதனை தெரிவித்தார். மேலும் அனுவார் பல புகைப்படங்களையும் அதனோடு பகிர்ந்திருந்தார்.
அப்புகைப்படத்தில் ஸாஹிட், பி.கே.ஆர் பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுஷன் இஸ்மாயில் மற்றும் சுங்கைப்பட்டாணி எம்.பி ஆகியோர் உணவருந்துவதற்கு ஒன்று கூடியது போலுள்ளது.
இருப்பினும், இப் புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டன என்பதை அன்னுவார் குறிப்பிடவில்லை, அவை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கு (MCO) காலத்தில் வெளிப்படையாகப் பிடிக்கப்பட்டவை என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
கடந்த வார இறுதியில் (ஜூலை 10) SOP களை மீறியதற்காக அனுவார் மூசாவிற்கு 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய எஸ்ஓபிகளின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கில் சமூக வருகைகள் அனுமதிக்கப்படாத நிலையில், முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி மற்றும் அவரது மனைவி ஜீன் அப்துல்லா ஆகியோரை சனிக்கிழமை அவர்களது இல்லத்திற்கு சென்றதற்காக அனுவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அவரது அலுவலகத்தில் இருந்து வெளியான ஓர் அறிக்கையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
“அவர் காவல்துறையினரிடமிருந்து அபராதத்தை பெற்றுள்ளார், விரைவில் அதை செலுத்துவார்” என்று அவ் அறிக்கையில் எழுதியிருந்தது.
மேலும் பிப்ரவரியில், செராசில் உள்ள ஒரு சமூக மையத்திற்கு வருகை தந்தபோது, ஆறு பேருடன் ஒரே மேஜையில் சாப்பிட்டதற்காக அனுவார் மூசா 1,000 வெள்ளி அபராதம் செலுத்தினார். அந்த வேளையில் SOP களின் கீழ், வெளியே சாப்பிடும்போது இரண்டு பேர் மட்டுமே ஒரு மேசைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.