அண்டை வீட்டாருடன் நடந்த சண்டை கத்தி குத்தில் முடிந்தது

ஜோகூர் பாரு: தாமான் பெர்மாஸ் ஜெயாவில்  50 வயதான ஆடவர்  தனது அண்டை வீட்டாருடன்  சண்டையிட்ட பின்னர் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று இரு ஆடவர்களிடையே இடையே சண்டை வெடித்ததாக ஜோகூர் பாரு தெற்கு OCPD உதவி ஆணையர் முகமட் பாட்ஸில் முகமட் ஜெய்ன் தெரிவித்தார்.

வீட்டின் பின்னால் தனது வீட்டுத் தோழர்களுடன் சமைக்கும் போது சத்தம் எழுப்பியதற்காக பக்கத்து வீட்டுக்காரர் கோபமடைந்தபோது சண்டை தொடங்கியதாகக் கூறப்படுகிறது

அண்டை வீட்டாரை அடிவயிற்றில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. அதே நாளில் பிற்பகல் 2.45 மணியளவில் சந்தேக நபர் சம்பவ இடத்திற்கு அருகே கைது செய்யப்பட்டார் என்று இன்று தெரிவித்தார்.

பலியானவர், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், தற்போது நிலையான நிலையில் உள்ளார். ஏ.சி.பி. முகமட் பாட்ஸில், அண்டை வீட்டார் ஜூலை 23 வரை நான்கு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here