BN எம்.பி.க்கள் PN -ஐ ஆதரிக்கும் கடிதத்தில் கையெழுத்திட்டனர்; ஆனால் உறுதிமொழி கடிதத்தில் அல்ல – நஸ்ரி விளக்கம்

பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜீஸ், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான கோலாலம்பூரில் உள்ள விஸ்மா பெர்விரா என்ற கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்ததை உறுதி செய்தார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு சட்டரீதியான  (சத்திய பிரமாண) கடிதத்தில் கையெழுத்திடவில்லை   என்றும்  பிரகடன கடிதத்தில்  மட்டுமே கையெழுத்திட்டனர் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

நான் சந்திப்பை உறுதி செய்கிறேன். ஆனால் நாங்கள் உறுதி மொழி கடிதத்தில் கையெழுத்திடவில்லை. சத்திய பிராமண உறுதிமொழி கடிதம் சத்திய பிரமாண ஆணையர் முன்னிலையில் மட்டுமே கையெழுத்திட முடியும்.

பிஎன் அரசாங்கத்தை பாதுகாக்க நாங்கள் ஒரு பிரகடன கடிதம் செய்தோம்” என்று நஸ்ரி  கூறினார். நேற்று, துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் எம்சிஏ மற்றும்  மஇகா பிரதிநிதிகள் உட்பட 26 பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்பாளர்களுடன் எம்சிஏ தலைவர் வீ கா சியோங்கும் ஜூம் மூலம் தொடர்பு கொண்டதாக கூறப்பட்டது.

இதற்கிடையில், சினார் ஹரியான் 30 எம்.பி.க்கள் சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவித்தார். கூட்டத்திற்கு முன், இஸ்மாயில் சப்ரி 42 BN நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் முஹிடினுக்கு ஆதரவான அறிக்கையை உறுதி செய்தனர். இது கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்டது.

பிஎன் மீதான அரச கண்டனம் அரசாங்கமாக அதன் சட்டபூர்வத்தன்மை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பிய பிறகு இது வந்தது.

இஸ்மாயில் சப்ரியின் விளக்கம் பிஎன் நிர்வாக செயலாளர் முகமட் சஹ்ஃப்ரி அப் அஜீஸ் எழுப்பிய சர்ச்சைக்குப் பிறகு, அந்த அறிக்கை போலியானது என்று கண்டனம் செய்து பிஎன் லெட்டர்ஹெட் (முகப்பு கடிதம்) பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here