மடானி அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை- PN-ஐ அனைத்து இனங்களுடன் இணக்கமாக இருக்க கட்டாயப்படுத்துகிறது: ரமணன்

மடானி அரசாங்கத்தின் தொலைநோக்கு தான், பெரிக்காத்தான் நேஷனல் (PN) ஒரே சமூகத்தை மட்டுமே குறிவைத்து செயல்படாமல், அனைத்து இனத்தாருடனும் தொடர்பு கொள்ளும் நிலைக்கு தள்ளியுள்ளது என்று பிகேஆர் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர். ராமணன் தெரிவித்துள்ளார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் மடானி அரசாங்கம் கீழ்   எந்த இனமோ அல்லது குழுவோ ஒதுக்கப்படாமல், உள்ளடக்கிய தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே, பாஸ் போன்றவர்கள் குறிப்பாக இந்திய சமூகத்தை அணுகுவதற்குக் காரணம் என்று கூறினார்.

முன்னர் (அதன் தொடர்புகளில்) இந்திய சமூகத்தைப் பற்றி ஒருபோதும் குறிப்பிடாத பாஸ், அதன் அணுகுமுறையை மாற்றிவிட்டது. (இப்போது அவர்கள்) இந்திய சமூகத்தைப் பற்றி நாம் அக்கறை கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்கள் இந்திய சமூகத் தலைவர்கள் தலைமையிலான கட்சிகளிடமிருந்து கூட்டாளிகளைத் தேடுகிறார்கள். ஏன்?

ஏனென்றால் இது மடானியின் பலம். மடானி அரசாங்கத்தில் அனைவருக்கு சமமாக நடத்தப்படுகின்றனர். இது அனைத்து இனக்குழுக்களிடையே ஒற்றுமைக்கான ஒரு தொலைநோக்குப் பார்வை என்று அவர் கூறியதாக  பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

உரிமை, மலேசிய முன்னேற்றக் கட்சி போன்ற கட்சிகளை உள்ளடக்கிய PN தலைமையிலான தளர்வான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவது குறித்து அவர் கருத்து தெரிவித்தார். PN, MCA மற்றும் MIC உடனும் முறைசாரா விவாதங்களை நடத்தியுள்ளது.  இவை இரண்டும் ஆளும் பாரிசன் நேஷனல் கூட்டணியில் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here