பெட்டாலிங் ஜெயா: அக்டோபர் மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தடுப்பூசி விகிதத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டது என்று பிரதமர் கூறினார்.
“இன்று காலை கோவிட் -19 தடுப்பூசி விநியோகத்திற்கான (JKJAV) செயல்பட்டை உறுதி செய்வதற்கான சிறப்புக் குழுவால் எனக்கு விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ், தடுப்பூசி செயல்முறை சரியாக பட்டியலிடப்பட்டு உள்ளது.
ஆகஸ்ட் 31 க்குள், 60% க்கும் மேற்பட்ட பெரியவர்கள் அல்லது மொத்த மக்கள்தொகையில் 40% பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பார்கள்.
“அக்டோபர் இறுதிக்குள் 100% பெரியவர்கள் அல்லது 80% மக்கள் இரு டோஸ்களையும் முடித்திருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
தடுப்பூசி இயக்கத்தின் தற்போதைய விகிதத்தின் அடிப்படையில் இந்த இலக்கு நிச்சயமாக எட்டப்படும் என்று நம்புவதாக முஹிடின் கூறினார்.
தடுப்பூசி விகிதம் அதிகரிக்கும் போது வகை 4 மற்றும் 5 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் கடுமையாக குறையும் என்று நாடு தழுவிய மற்றும் சர்வதேச தரவு காட்டுகிறது என்றும் பிரதமர் கூறினார்.
“கடவுள் நாடினால், நம் நாடு தொற்றுநோயை மிக விரைவில் வெல்ல வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.