மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவை சந்திக்க தற்காலிக பிரதமர் முஹிடின் யாசின் வந்துள்ளார். மாலை 2.50 மணியளவில் அரண்மனை வாயிலுக்குள் நுழைந்த பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் இன்று மாமன்னரை சந்திக்கும் கடைசி நாடாளுமன்ற உறுப்பினராவார்.
ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப்பை ஆதரித்து சட்டரீதியான அறிவிப்புகளை சமர்ப்பித்ததாக கூறப்படும் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள்சி இன்று மாமன்னரை சந்திக்க இஸ்தானா நெகாராவுக்கு வரவழைக்கப்பட்டனர். முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல குழுக்கள் மன்னர சந்திக்க வந்தனர். இதில் அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் அடங்குவார்.