கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பிரதமர் இன்று பார்வையிடுகிறார்

அலோர் ஸ்டார்: பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று கெடாவில் உள்ள கோலா மூடா மற்றும் யான் மாவட்டங்களுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ பணி விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். கடந்த புதன்கிழமை குனூங் ஜெராய் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமீபத்திய நிலைமையை அவர் சரிபார்க்கிறார்.

மாநில அரசால் வெளியிடப்பட்ட பயணத்திட்டத்தின்படி, இஸ்மாயில் முதலில் துவா பாலம், தாமான் லெம்பா மெர்பாக் மற்றும் துபா நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட கோலா மூடாவில் உள்ள மெர்போக்கிற்குச் செல்வார்.

அவர் அடுத்து யானில் உள்ள தித்தி ஹயூனைப் பார்வையிடுவார். அங்கு அவருக்கு மந்திரி பெசார் முஹம்மது சனுசி எம்டி நோர் வெள்ள நிலை குறித்து  விளக்கமளிப்பார்.

மாலையில் கோலாலம்பூருக்குத் திரும்புவதற்கு முன் அவர் யான் நகரில் உள்ள மஸ்ஜித் ஜாம் பத்லிஷாவுக்கு நிதியுதவி வழங்குவதற்கும், செய்தியாளர் சந்திப்புடன் தனது வருகையை நிறைவு செய்வார்.

வெள்ளத்தினால் 5 பேர் பலியான வேளையில், மற்றொருவரை காணவில்லை. யானில் சுமார் 800 வீடுகள் மற்றும் கோலா மூடாவில் மேலும் 200 வீடுகள் பாதிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here