கடந்த 24 மணி நேரத்தில் 19,733 கோவிட் -19 தொற்றினை சுகாதார அமைச்சகம் பதிவு செய்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,900,467 ஆக உள்ளது.
சரவாக் மீண்டும் அதிக எண்ணிக்கையிலான 3,100 தொற்றினை பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சிலாங்கூர் (2,989), பினாங்கு (2,474), சபா (2,067), ஜோகூர் (1,867), கெடா (1,564), கிளந்தான் (1,471), பேராக் (1,319), தெரெங்கானு (904), பகாங் (700), கோலாலம்பூர் (537), மலாக்கா (375), நெகிரி செம்பிலான் (256), பெர்லிஸ் (74), புத்ராஜெயா (29), லாபுவான் (ஏழு).