சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரியின் தந்தை காலமானார்

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரியின் தந்தையின் ஷாரி மோக்ஸின் 67, மூச்சுத் திணறல் காரணமாக இன்று (செப்டம்பர் 21) காலமானார். அவரது உடல் நாளை (செப்டம்பர் 22) காலை ஜோகூர் பொந்தியானில்  உள்ள கம்போங் பாரிட் ஆசம் கும்பாங்கில் அடக்கம் செய்யப்படும். அவரது மரணம் அமிருதீனின் அரசியல் செயலாளர் ஜுவிரியா சுல்கிஃப்ளி வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

அமிருதீன் தனது தந்தையுடன் மதியம் 1.27 மணிக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாகவும், தனது தந்தை இறந்த செய்தி மாலை 5.30 மணிக்கு கிடைத்ததாகவும் டுவீட் செய்தார்.

நான் குழந்தையாக இருந்த காலகட்டத்தில் நமக்கு நெருங்கிய ஒருவர் இறக்கும் போது நான் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். உயிருடன் இருக்கும் அனைவருக்குமே மரணம் வரும் என்று விதியை ஏற்றுக்கொண்டேன் என்று அவர் டுவீட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here