கால்வாயில் விழுந்த 8 வயது சிறுமி சடலமாக மீட்பு

ஷா ஆலம் கம்போங் பாரு ஹைக்கோம், ஜாலான் பூங்கா தஞ்சோங் 4 இல் வாய்க்காலில் விழுந்த எட்டு வயது சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமிஸ் ஒரு அறிக்கையில், திங்கட்கிழமை (செப்டம்பர் 27) காலை 8.42 மணியளவில் அவர் விழுந்த இடத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவில்  பாதிக்கப்பட்டவரின் உடலை பொதுமக்கள் கண்டெடுத்தனர்.

பின்னர் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.18 மணியளவில் வாய்க்காலில் விழுந்த பின்னர் சிறுமி வேகமாக ஓடும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here