அக்.1 ஆம் தேதி முதல் சில பயணிகளுக்கு My Travel Pass ஒப்புதல் தேவையில்லை

My Travel Pass (MTP) க்கு விண்ணப்பிக்க சிலருக்கு  அக்டோபர் 1 முதல் சில பயணிகளுக்கு குடிநுழைவுத் துறையால் விலக்கு வழங்கப்படுகிறது. ஒரு செய்திக்குறிப்பில், குறிப்பிட்ட காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேற விரும்பும் குடிமக்கள் MTP ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்கள் புதிதாக கல்வி பயில மற்றும் பழைய மாணவர்கள் கல்வி அல்லது தேர்வில் அமர, இரண்டு துணைப் பயணிகளுடான அனுமதி மற்றும் இறப்புகள் அல்லது தீவிர நோய் போன்ற அவசரநிலைக்கு செல்வது, மேலும் வெளிநாடுகளில் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் வெளிநாட்டில் உள்ள தங்கள் வாழ்க்கைத் துணைவர்களைச் சந்திக்க அனுமதி தேவையில்லை.

விளையாட்டு நிகழ்வுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் மற்றும் மனிதாபிமான உதவிப் பணிகளில் பங்கேற்பவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த விலக்கின் கீழ் மலேசியா மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் MTP விண்ணப்பிக்க தேவையில்லை என்று துறை தெளிவுபடுத்தியது.

கோவிட் -19 காலத்தில் மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் நுழைவு அல்லது வெளியேறும் அனுமதிக்கு விண்ணப்பிக்க எளிதாகவும் வேகமாகவும் இருக்க கடந்த ஆண்டு அக்டோபரில் குடிவரவுத் துறை MTPஅமைப்பை அறிமுகப்படுத்தியது.

அதற்கு முன், மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைய அல்லது வெளியேற விண்ணப்பங்கள் மின்னஞ்சல்கள் மூலம் செய்யப்பட்டன. அந்த நேரத்தில் தினசரி 5,000 முதல் 6,000 மின்னஞ்சல்களை இத்துறை கையாள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here