திடீரென காரின் மேல் விழுந்த 80 அடி உயரமான இரப்பர் மரம்; காரில் பயணம் செய்த இருவரும் பாதுகாப்பாக தப்பினர்

பெட்டாலிங் ஜெயா: இன்று காலை 9 மணியளவில், கிள்ளானுக்கு அருகிலுள்ள ஜா ராஜா நோங்-தாமான் செந்தோசாவில் காரின் மேல் 80 அடி உயர இரப்பர் மரம் கிடைமட்டமாக விழுந்ததில் இரண்டு பேர் காயமின்றி தப்பினர் என்று சிலாங்கூர் தீயணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கிள்ளான் பகுதி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) மூத்த செயல்பாட்டு அதிகாரி ஜகாரியா ஜைனுடின் கூறினார்.

“இன்று காலை 9.18 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்கு அழைப்பு வந்து, நான்கு நிமிடங்களுக்குப் பிறகு நாங்கள் அந்த இடத்திற்கு வந்தோம்.

“இருப்பிடத்திற்கு வந்தவுடன், 50 வயதிற்குட்பட்ட கார் ஓட்டுநரும் அவரது 17 வயது மகனும் சென்றுகொண்டிருந்த புரோட்டான் எக்ஸோரா வாகனத்திலிருந்து இறங்கினார்கள்” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

தாமான் ஆண்டாலாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் சாலையில் விழுந்த மரங்களை அகற்றினார்கள் என்றும் இந் நடவடிக்கை சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னர் முழுமையாக முடிந்தது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here