போர்ட் கிள்ளானில் ஒரு தனியார் மருத்துவமனையில் தீ

போர்ட் கிள்ளான் பெர்சியாரான் ராஜா மூடா மூசாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (அக் 10) இரவு இங்குள்ள இரண்டு காலி வார்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குனர் நோரஹாம் காமிஸ் இரவு 11.38 மணிக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், போர்ட் கிள்ளான் தீயணைப்பு நிலையத்தின் பணியாளர்கள் நான்கு நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்களுக்குள் தீயை அணைக்க முடிந்தது என்று அவர் கூறினார். பக்கத்து வார்டுகளைச் சேர்ந்த 28 நோயாளிகள், 20 ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் இரண்டு பாதுகாவலர்கள் உட்பட மொத்தம் 50 பேர் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தீவிபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று நோராஹாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here