சரவாக் மாநிலத்தில் உள்ள சிறுதொழில் நிறுவனங்களுக்கு 3,000 வெள்ளி சிறப்பு உதவித் தொகையாக அறிவிப்பு

கூச்சிங்: சரவாக் மாநிலத்தில் உள்ள சிறுதொழில் நிறுவனங்களுக்கான  3,000வெள்ளி சிறப்பு உதவித் தொகையை சரவாக் முதல்வர் டத்தோ பாடிங்கி அபாங் ஜோஹரி ஓபன் இன்று அறிவித்தார்.

இந்த நிதியுதவி சுமார் 24,600 சிறுதொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்  வழங்கப்படும் என்றார். மேலும் இது 73.8மில்லியன் வெள்ளி செலவை உள்ளடக்கும் என்றார்.

இந்த ஆண்டு மார்ச் 31 -ஆம் தேதி வரை சமூகப் பாதுகாப்பு அமைப்பில் (Socso) பதிவு செய்த நிறுவனங்கள் மட்டுமே இந்த நிதி உதவிக்கு தகுதி பெறும் என்று அபாங் ஜோஹரி கூறினார்.

சிறுதொழில் நிறுவனங்கள் தொடர்புடைய துணை ஆவணங்களை “ஆன்லைன் சாரவாக் போர்ட்டல் மூலம்” இந்த மாத இறுதிக்குள் கிடைக்கும் படி வழங்க வேண்டும் என்றார்.

மேலும், சரவாக்கில் உள்ள சொக்சோவில் பதிவுசெய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SME) சிறப்பு 10,000வெள்ளி நிதி உதவி,  டிசம்பர் 31, 2020 முதல் மார்ச் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அபாங் ஜோஹரி கூறினார்.

“ஆகஸ்ட் மாதத்தில், சரவாக் நகரின் செயலில் உள்ள வணிகங்களுக்கான 10,000வெள்ளி நிதியுதவியை நான் அறிவித்தேன், டிசம்பர் 31, 2020 வரை சொக்சோவில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னர் வரையறை செய்யப்பட்டிருந்தது. பின்னர் ஜனவரி முதல் மார்ச் 31 வரை பதிவுசெய்யப்பட்ட வணிகங்களைச் சேர்க்கும் நோக்கில் நாங்கள் அதை நீட்டிக்க முடிவு செய்தோம் “என்று அவர் கூறினார்.

“இந்த நிதி உதவி 470 செயலில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சரவாக் அரசாங்கத்திற்கு 4.7மில்லியன் வெள்ளி நேரடிச் செலவை ஏற்படுத்தும்,” என்று அவர் மேலும் கூறினார்.

பந்துவான் காஸ் சரவாக் சயாங் 7.0 ( Bantuan Khas Sarawakku Sayang 7.0 )இன் கீழ் இரண்டு கூடுதல் நடவடிக்கைகளுக்கு மாநில அரசுக்கு 78.5 மில்லியன் வெள்ளி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அபாங் ஜோஹரி கூறினார்.

இந்த உதவிகளின் மூலம், வணிக சமூகத்தின் மீதான நிதிச்சுமையை குறைத்து, கோவிட் -19 தொற்றுநோயின் மீட்பு கட்டத்தில் முன்னேற அவர்களுக்கு உதவ முடியும் என்று நம்பப்படுகிறது என்றார்.

ஒவ்வொரு சரவாக்கியனும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், அதன் வணிக சமூகத்தை ஆதரிப்பதற்கும் மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் மாநில அரசு BKSS 1.0 முதல் 7.0 வரை 30 திட்டங்கள் மற்றும் 5.3 பில்லியன் வெள்ளி அளவிலான ஏழு தொகுப்புகளை உருவாக்கியுள்ளதாக அபாங் ஜோஹரி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here