ஜோகூர் பாரு: மூவாரில் இன்று காலை ஒரு போலீஸ்காரர் கழுத்தில் துப்பாக்கி காயத்துடன் இறந்து கிடக்க காணப்பட்டார்.
ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை இச்சம்பவம் பற்றி கூறுகையில், தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு போலீஸ்காரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
“இன்று காலை சுமார் 8.20 மணியளவில், ஒரு போலீஸ்காரர் தற்கொலை செய்ய விரும்புவதாக வாட்ஸ்அப் மூலம் மூவார் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
“அவரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காலை 11.18 மணியளவில், போலீசாரின் உடல் அவரது வாகனத்தில் மூவாரில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டது. மேலும் அவரது உடலில் 38 ரிவால்வர் இருந்தது,” என்றும் அயோப் கான் ஒரு அறிக்கையில் கூறினார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடந்து வருவதாகவும் அயோப் கான் கூறினார்.