“Ops Samseng Jalanan”‘ கீழ் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் வயது குறைந்தவர்களே; ஜோகூர் போலீஸ் தகவல்

பாசீர் கூடாங், அக்டோபர் 23 :

கடந்த மாதம் தொடங்கி, பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் போலீசார் நடத்திய ஐந்து நடவடிக்கைகளில் 8 வாகனமோட்டிகள் கைது செய்யப்பட்டனர் மற்றும் 118 பேருக்கு சம்மன்கள் வழங்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில் 57 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாக செரி ஆலம் மாவட்ட போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் முஹமட் சோஹைமி இஷாக் கூறினார்.

“பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் ”mat rempit’ ‘ நடவடிக்கைகள் தொடர்பாக நாங்கள் பெற்ற பொதுப் புகார்களின் அடிப்படையில் “Ops Samseng Jalanan” செயல்பாடுகள் நடத்தப்பட்டன.

“13 முதல் 26 வயதுடைய எட்டு வாகனமோட்டிகள், சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 42 (1) ஐ மீறியதற்காக கைது செய்யப்பட்டனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“Ops Samseng Jalanan” இன் போது கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் வயது குறைந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here