2022 வரவு செலவுத் திட்டம்: பாதுகாப்பு சேவைகள் துறைக்கு RM33 பில்லியன் நிதி ஒதுக்கீடு

கோலாலம்பூர், அக்டோபர் 29 :

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு சேவைகள் துறைக்கு RM33 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த நிதியமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜிஸ், உள்துறை அமைச்சகத்திற்கு RM16 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள RM17 பில்லியன் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“RM1.6 பில்லியன் சம்பந்தப்பட்ட ஒதுக்கீட்டின் ஒரு பகுதி ஆயுதப்படைகளின் முக்கிய சொத்துக்களின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

பாராசூட்கள், மூடிய சர்க்யூட் டைவிங் கருவி மற்றும் படகுகள் போன்ற முறையே பாஸ்கல் (Paskal) மற்றும் பாஸ்காவ் (Paskau) என அழைக்கப்படும் ரோயல் மலேசியன் நேவி மற்றும் ரோயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸின் சிறப்புப் படைகளுக்கான முக்கிய உபகரணங்களை மாற்ற இந்த ஒதுக்கீட்டில் RM14 மில்லியன் செலவிடப்படும்,” என்று தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

மேலும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களின் நலன் மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு, இராணுவ முகாம்கள், இராணுவ வசதிகள் மற்றும் ஆயுதப்படை குடும்ப வீடுகளில் உள்ள பள்ளிகளை பராமரிக்க RM230 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில், காவலர்களுக்கான லிஃப்ட் மற்றும் குடியிருப்புகளை மாற்றுதல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகியவை அடங்கும்.

தேசத்தின் இறையாண்மையை வலுப்படுத்த, சபாவில் உள்ள பகலுங்கன் மற்றும் சரவாக்கில் டெமோங் முரா ஆகிய இடங்களில் காவல்துறையின் பொது நடவடிக்கைப் படைக்கு (GOF) எட்டு கட்டுப்பாட்டு நிலைகளை (control posts ) அரசாங்கம் எளிதாக்கும் என்றார் .

“இவை அமலாக்கப் பணியாளர்களால் நமது எல்லைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கு வழிவகுக்கும் ” என்று அவர் கூறினார்.  சரவாக்கின் டெலோக் மெலனோ மற்றும் பாலேஆகிய இடங்களில் நான்கு கூடுதல் குடியேற்ற நுழைவுச் சாவடிகள் திறக்கப்படும் என்றும் தெங்கு ஜஃப்ருல் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here