கடந்த 24 மணி நேரத்தில் 5,845 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா 6,715 குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தோரின் 2,368,634 ஆக உள்ளது.
மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,466,663 ஆக உள்ளது என்று நூர் ஹிஷாம் கூறினார். தீவிர சிகிச்சையில் 570 நோயாளிகள் இருந்தனர். அவர்களில் 503 பேருக்கு கோவிட் -19 தொற்று உள்ளது என்றும் மற்றும் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், 293 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. 216 நோயாளிகளுக்கு கோவிட்-19 தொற்று என்றும் மற்றும் மீதமுள்ள 77 பேர் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.
இன்று 5,841 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 5,504 மலேசியர்கள் மற்றும் 377 வெளிநாட்டினர் உள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட 13 தொற்றுகள் இருந்தன. புதிய நோய்த்தொற்றுகள் பற்றி நூர் ஹிஷாம் கூறினார். 1.3% மட்டுமே வகை 3, 4 மற்றும் 5 ஆகும். நாட்டின் கோவிட்-19 நோய்த்தொற்று விகிதம் 0.95 ஆக இருந்தது. நெகிரி செம்பிலானில் 1.04 ஆக உயர்ந்த R-Nought நிலை உள்ளது.