சுகாதார அமைச்சு இன்று 5,291 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவுசெய்துள்ளது. ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,486,630 ஆக உள்ளது. நாடளாவிய அளவில், கடந்த ஏழு நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீதம் குறைந்துள்ளது.
இருப்பினும், சில மாநிலங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெரெங்கானு (+38.1 சதவீதம்), நெகிரி செம்பிலான் (+20.3 சதவீதம்) மற்றும் கெடாவில் (+15.0 சதவீதம்).
அக்டோபர் 9 முதல், சுகாதார அமைச்சகம் நள்ளிரவுக்குப் பிறகு மாநிலங்களின் புதிய தொற்றுகளின் விவரத்தை அதன் CovidNow போர்ட்டலில் வெளியிடும்.
நேற்று (நவம்பர் 2) 5,071 புதிய வழக்குகள் பதிவாகியுள்ள மாநிலங்களின் தொற்று விவரம் பின்வருமாறு: சிலாங்கூர் (899), கிளந்தான் (688), சபா (549), சரவாக் (528), ஜோகூர் (419), கெடா (347), பினாங்கு (276), கோலாலம்பூர் (259), பகாங் (250), பேராக் (219), தெரெங்கானு (217), மலாக்கா (214), நெகிரி செம்பிலான் (119), பெர்லிஸ் (54), புத்ராஜெயா (33),லாபுவான் (0).
நேற்றைய நிலவரப்படி நாட்டின் R-nough 0.95 ஆக உள்ளது. 1.00 க்கும் குறைவான R-NAT என்பது கோவிட்-19 இன் பரவல் குறைந்து வருவதாகக் கூறுகிறது. R-naught 1.00 க்கு மேல் இருக்கும் இரண்டு பகுதிகள் உள்ளன – புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர். குறிப்பிடத்தக்க வகையில், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடந்த வாரத்தை விட சரியாக 1.00 என்ற R-nough ஐ பதிவு செய்துள்ளன.