புதிய ஆதார நாடுகளில் இருந்து பாதுகாப்பு சேவை பணியிடங்களுக்கு தொழிலாளர்கள் தருவிக்கப்படுவர்

பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய  புதிய ஆதார நாடுகளில் இருந்து பாதுகாப்பு சேவைத் துறையின் காலியிடங்களை நிரப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின்  தெரிவித்தார். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் அமைச்சகம் இந்த விஷயத்தை ஆராய்ந்து, எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய பங்குதாரர்களுடன் மேலும் விவாதங்களை நடத்தும் என்றார்.

இன்று பாதுகாப்பு சேவை தொழில்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுடனான சந்திப்பை நடத்திய பின்னர், “தொழில்துறையினர் மற்றும் வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடனான அமர்வுக்குப் பிறகு இதை நான் பின்னர் அறிவிப்பேன்.

ஹம்சா மேலும் கருத்து தெரிவிக்கையில், அழைத்து வரப்படுபவர்கள் உண்மையில் மலேசியாவில் வேலை செய்ய விரும்புகிறார்கள். வேறு நோக்கங்களுக்காக அல்ல என்பதை உறுதிப்படுத்தவே இது என்றார். இது தேசிய பாதுகாப்பை உள்ளடக்கியது மற்றும் இந்த பிரச்சினையில் நான் மிகவும் உணர்திறன் உடையவன் என்று அவர் கூறினார்.

2014-ம் ஆண்டு முதல் மொத்தம் 66 பாதுகாப்பு சேவை நிறுவனங்களின் உரிமங்கள் பாதுகாப்பு சோதனையின்மை, துப்பாக்கிகளை தவறாக பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை பணியமர்த்துதல் போன்ற காரணங்களால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஹம்சா தெரிவித்தார்.

எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்க அனைத்து பாதுகாப்பு சேவை நிறுவனங்களும் இந்த ஆண்டு டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் தங்கள் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், மற்ற அதிகாரிகளைப் போலவே பாதுகாப்புக் காவலர்களும் அடிப்படைப் பயிற்சியைப் பெறுவதற்கு உள்துறை அமைச்சகம் ஒரு பாதுகாப்பு சேவை தொழில் பயிற்சி அகாடமியை நிறுவும் என்று ஹம்சா கூறினார். அகாடமி அமைச்சகத்தின் கீழ் உள்ள ராயல் மலேசியா போலீஸ், மக்கள் தன்னார்வப் படை (ரேலா) மற்றும் குடிநுழைவுத் துறை போன்ற பிற நிறுவனங்களுடன் ஒத்துழைக்கும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here