சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 5,439 கோவிட்-19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்றைய 4,897 தொற்றுகளை இருந்து அதிகரித்துள்ளது. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,638,221 தொற்றுகளாக உள்ளது என்று சுகாதார த்லைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
6,803 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 500 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 400 பேர் கோவிட் -19 நேர்மறை மற்றும் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். மொத்தம் 258 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. 161 நோயாளிகள் கோவிட்-19 நேர்மறை மற்றும் மீதமுள்ள 97 பேர் நேர்மறையாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.
இன்று 5,418 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 5,229 மலேசியர்கள் மற்றும் 189 வெளிநாட்டினர் மற்றும் 21 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் உள்ளன. இதில், நோயறிதலின் போது 1.9% நோயாளிகள் மட்டுமே வகை 3, 4 அல்லது 5 இல் இருந்தனர். இன்று ஆறு குழுக்கள் பதிவாகியுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார்.