கோல கங்சார் எம்ஆர்எஸ்எம் பள்ளி மாணவர்கள் அறுவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி

ஈப்போ, டிசம்பர் 2 :

கோல கங்சாரில் உள்ள மக்தாப் ரெண்டா சைன்ஸ் மாரா (MRSM) சுல்தான் அஸ்லான் ஷாவைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது .

இதை மாநில சுகாதாரம், அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் பசுமைத் தொழில்நுட்பக் குழுத் தலைவர் முஹமட் அக்மல் கமருடின் உறுதிப்படுத்தினார்.

பள்ளியில் உள்ள கோவிட்-19 தொற்றுக்கள் ஜாலான் கோல கங்சார்- கெரிக்கில் ஏற்பட்ட கோவிட்-19 திரள்களில் சேர்க்கப்பட்டதாக முஹமட் அக்மல் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

அந்த ஆறு பேரும் பள்ளியின் படிவம் 5 மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இதனால் பள்ளி நிர்வாகம் படிவம் 5 மாணவர்களிடம் திரையிடலை நடத்தியது. ஆனால் அனைத்து சோதனைகளும் எதிர்மறையாக வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here