கோலாலம்பூர், டிசம்பர் 2 :
இன்று தொடங்கப்படும் “மலேசியன் குடும்ப விற்பனை” சந்தை விலையை விட 15 முதல் 20 விழுக்காடு குறைவான விலையில் பல்வேறு அடிப்படைப் பொருட்களை வழங்கும்.
பல்வேறு முகவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டு முயற்சியானது நுகர்வோருக்கு குறிப்பாக B40 குழுமத்திற்கு பயனளிக்கும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் (KPDNHEP) நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
வழங்கப்படும் அடிப்படைத் தேவைகளில் கோழி முட்டை, புதிய மீன், சிவப்பு மிளகாய், வெங்காயம், மத்தி மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆகியவை அடங்கும்.
“நாடு முழுவதும் 2,300 KPDNHEP அமலாக்க பணியாளர்களால் இந்த அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அனைத்து வளாகங்களிலும் 480 கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விலையை கண்காணிக்க 1,000 க்கும் மேற்பட்ட விலை கண்காணிப்பு அதிகாரிகளை KPDNHEP பணியில் அமர்த்தும் ” என்று அறிக்கை கூறுகிறது.
இத்திட்டம் இங்குள்ள டத்தரான் பெர்புஸ்டகான் லெம்பா பந்தாயில் மாலை 5 மணிக்கு தொடங்கப்படும்.
ஒவ்வொரு மாநிலத்திலும், குறிப்பாக பெரிய நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் அடிப்படைத் தேவைகளின் விலைவாசி உயர்வினால் ஏற்படும் உயர்ந்த வாழ்க்கைச் செலவை சமாளிக்க மக்களுக்கு உதவுவதற்காக, ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொருத்தமான இடங்களை அமைச்சகம் கண்டறிந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– பெர்னாமா





















