நவம்பர் 27 வரை கிளந்தான், திரெங்கானுவிற்கு தொடர் கனமழை எச்சரிக்கை!

கோலாலம்பூர்:

ரும் திங்கட்கிழமை (நவம்பர் 27) வரை கிளந்தான் மற்றும் திரெங்கானுவின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அபாய நிலை எச்சரிக்கையாகும்.

கிளந்தானில் தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானாஹ் மேரா, பச்சோக், மஞ்சுங், பாசீர் பூத்தே மற்றும் கோலக்கிராய் ஆகிய இடங்களில் இந்த வானிலை நிலவும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று (நவம்பர் 25) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், திரெங்கானுவில், பெசூட், செத்தியூ, கோலா நெருஸ், கோலா திரெங்கானு மற்றும் மாராங் ஆகிய பகுதிகளும் இந்த தொடர் கனமழையால் பாதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னர், பேராக் (உலு பேராக்), கிளந்தான் (குவா மூசாங்) மற்றும் திரெங்கானு (உலு திரெங்கானு, டுங்கூன் மற்றும் கெமாமன்) ஆகிய இடங்களில் இதே காலகட்டத்தில் கடுமையான அளவிலான தொடர்ச்சியான கனமழை பெய்யும் என் மெட்மலேசியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here