ஜோகூர் ஆற்றில் மூழ்கிய மூன்று வயது குழந்தையின் உடல் மீட்கப்பட்டது

ஜோகூர் பாரு Jalan Anggerik Putih Majidee, Sungai Kampung Desa Makmur, அருகே உள்ள ஆற்றில் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சனிக்கிழமை (டிசம்பர் 4) காலை 10.43 மணியளவில் தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாக தெப்ராவ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தலைவர் கைருல் அசார் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

ஆற்றங்கரையில் இருந்து சுமார் ஐந்து அடி தூரத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆறு தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். மேல் நடவடிக்கைக்காக உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஜோகூர் பாரு தெற்கு OCPD ACP ரவூப் செலமாட் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக உறுதிப்படுத்தினார். நாங்கள் இன்னும் குழந்தையின் இனம் மற்றும் பாலினம் குறித்து விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here