சரவாக் தேர்தல் – எம்ஏசிசி 5 புகார் மையங்களை திறந்துள்ளன

கூச்சிங்: மாநிலத் தேர்தலின் போது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஊழல்கள் குறித்து பொதுமக்கள் தகவல் மற்றும் புகார்களை பதிவு செய்ய ஐந்து செயல்பாட்டு மையங்களை சரவாக் முழுவதும் மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) திறந்துள்ளது.

குச்சிங், சிபு, மிரி, பிந்துலு மற்றும் லிம்பாங் ஆகிய இடங்களில் உள்ள எம்ஏசிசி அலுவலகங்களில் அமைந்துள்ள இந்த மையங்கள், தேர்தல் காலம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும்.

சட்டம் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறும் நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டாம் என்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எம்ஏசிசி நினைவூட்ட விரும்புகிறது என்று திங்கள்கிழமை (டிசம்பர் 6) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தவறுகள் குறித்த புகார்களை aduan.prnsarawak@sprm.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here