சரும வறட்சியானது உடலில் உள்ள வெளி உறுப்புகள் பலவற்றையும் பாதிக்க கூடும். உதடுகள் வறண்டு போகுதல், முகத்தில் வறட்சியால் தோல் உறிதல், பாத வெடிப்பு, முடி உதிர்வு போன்ற முக்கிய பாதிப்புகள் இதில் அடங்கும்.நமது உடலுக்கு குளிர் காலத்தில் அதிக பாதுகாப்பு தேவைப்படும்.
இதில் வெளியில் உள்ள தோல் முதல் உள்ளே இருக்கும் எதிர்ப்பு சக்தி மண்டலம் வரை அடங்கும். குளிர் காலங்களில் பலருக்கும் வருகின்ற பிரச்சனை, சருமம் வறண்டு போகுதல். இதை சரிசெய்ய பல்வேறு வழிகளை முயற்சித்து பார்த்திருப்பீர்கள். ஆனால் அவை எல்லாமே தோல்வி அடைத்திருக்கும். எதனால் இப்படி சருமம் வறண்டு போகிறது, இதை எப்படி சரி செய்வது, இதற்கான இயற்கை வழிகள் என்னென்ன போன்ற அனைத்தையும் இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
சரும வறட்சி : சரும வறட்சியானது உடலில் உள்ள வெளி உறுப்புகள் பலவற்றையும் பாதிக்க கூடும். உதடுகள் வறண்டு போகுதல், முகத்தில் வறட்சியால் தோல் உறிதல், பாத வெடிப்பு, முடி உதிர்வு போன்ற முக்கிய பாதிப்புகள் இதில் அடங்கும். இவை அனைத்திற்கும் மூல காரணம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் இல்லாமல் வறண்டு போகுதல் தான். மேலும் நமது குடல் பகுதியானது வறண்டு போனாலும் இப்படிப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். இதை எளிதாக போக்க நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நல்ல உணவுகள் : உடலில் உண்டாகும் வறட்சியை எளிதாக போக்க தினமும் சாப்பிட கூடிய உணவில் உலர் பழங்கள், ஆலிவ் ஆயில், தேங்காய், நெய் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு செய்து வந்தால் குளிர் காலத்தில் உடல் வறட்சி பாதிப்பு குறையும்.
ஈரப்பதம் : உங்கள் சருமத்தை குளிர் காலங்களில் ஈரப்பதாமாக வைத்து வறட்சியை போக்க சில இயற்கை ரீதியான மாய்சரைசரை பயன்படுத்தலாம். குறிப்பாக கற்றாழை ஜெல் கொண்ட மாய்சரைசர் மிக சிறந்தது. மேலும் அவ்வப்போது முகத்திற்கு இதை கொண்டு மசாஜ் செய்தும் வரலாம்.
அரிசி தண்ணீர் : அரிசி தண்ணீரில் அதிக ஆரோக்கிய நலன்கள் உள்ளன. ஜப்பானியர்கள் தங்களது அழகை மேம்படுத்த இந்த வழிமுறையை தான் பின்பற்றி வருகின்றனர். குளிர் காலங்களில் சரும வறட்சி உள்ள இடங்களில் அரிசி தண்ணீரை தடவி வந்தால் முக பொலிவை அதிகரிக்கும், அடிவரை சென்று ஈரப்பதமூட்டும். சிறந்த பலருக்கு சிறிது அரிசி நீருடன் பன்னீர் கலந்து தடவி வரலாம்.