பாசீர் மாஸ், டிசம்பர் 11 :
இங்குள்ள கம்போங் தஞ்சோங் ரெண்டாங்கிற்கு அருகிலுள்ள ஜாலான் அவுர் துரியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், இடிந்து விழுந்த அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 70 வயதுடைய மாற்றுத்திறனாளி மரணமடைந்தார் என்று பாசிர் மாஸ் காவல்துறையின் தலைமை துணை ஆணையர் நசாருடின் முஹமட் நசீர் தெரிவித்தார்.
உயிரிழந்தவரான அப்துல் மனாப் இஸ்மாயில், தனது மகளுடன் வீட்டில் தங்கியிருந்தபோது, அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
“அதிகாலை 4.44 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையை உள்ளடக்கிய மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு வந்தபோது, வீடு ஏற்கனவே 90 சதவீதம் இடிந்திருந்தது.
“வீட்டின் உரிமையாளரான பாதிக்கப்பட்டவர் தீயணைப்பு குழுவினரால் மீட்கப்பட்ட உடனேயே இறந்துவிட்டார் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நசாருடின் கூறினார்.
“அவரது மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிய உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.
தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்களுக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். அத்தோடு தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளன என்றார்.









