சுபாங் ஜெயா, டிசம்பர் 18 :
நேற்று இரவு, ஷா ஆலம் நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு ஹுபுங்கன் தெங்கா (Elite)) நெடுஞ்சாலையில், USJ ஓய்வு மற்றும் மறுவாழ்வு (R&R) பகுதியில் நான்கு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 8 சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், இந்த விபத்தில் இரண்டு புரோட்டான் வீரா, ஒரு பெரோடுவா ஆக்ஸியா மற்றும் ஒரு டிரெய்லர் ஆகியவை தொடர்புடையதாகக் கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் இரவு 11.42 மணிக்கு அழைப்பு வந்ததை அடுத்து, சுபாங் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் (BBP) மற்றும் பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் (BBP) ஆகியவற்றில் இருந்து 12 பேர் கொண்ட குழு மீட்பு நடவடிக்கைக்காக சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
“விபத்தில் 17 பேர் பாதிக்கப்பட்டனர், அதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது.
“இறந்தவர்கள் ஒரு ஆண், ஒரு பெண், மற்றும் ஐந்து சிறுவர்கள் மற்றும் மூன்று சிறுமிகளும் அடங்குவர் ” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன், தீயணைப்புப் படையினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை அகற்றினர். “டிரெய்லரை தூக்க கிரேன் பயன்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் வெற்றிகரமாக அகற்றப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நோரசாமின் கூற்றுப்படி, “10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது, மேலும் இந்த மீட்பு நடவடிக்கை அதிகாலை 2.40 மணிக்கு முடிந்தது என்று அவர் கூறினார்.