கிள்ளானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 1,011 ஆக உயர்வு

கிள்ளான், டிசம்பர் 18 :

இன்று காலை 7 மணி நிலவரப்படி, கிள்ளான் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 1,011 ஆக உயர்ந்துள்ளது.

மலேசியாவின் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிப்பாளர் (JBPM), நோரசாம் காமிஸ் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் செக்கோலா கேபாங்சான் (SK) டெலோக் கோங் , மஸ்ஜிட் அஸ்-இஸ்லாஹ் மற்றும் மஸ்ஜிட் அல் -உபிதியா ஆகிய மூன்று தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

” செக்கோலா கேபாங்சான் (SK) டெலோக் கோங்கில், இதுவரை 681 பேர் தஞ்சமடைந்துள்ளனர், இதுவே வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி ஆகும்.

“மேலும் 256 பாதிக்கப்பட்டவர்கள் பிபிஎஸ் மஸ்ஜிட் அஸ்-இஸ்லாவிலும், மேலும் 74 பாதிக்கப்பட்டவர்கள் மஸ்ஜிட் அல்-உபுதியாவிலும் உள்ளனர். மீட்பு நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

நேற்று, தொடர்ந்து பெய்த கனமழையைத் தொடர்ந்து கிள்ளான் மாவட்டத்தில் மொத்தம் 20 பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன மற்றும் டெலோக் காங்கீழ் வெள்ளம் இடுப்பு மட்டம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here