டெலிமொங் நிலச்சரிவில் சிக்கிய மேலும் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது

பெந்தோங், டிசம்பர் 20 :

இங்குள்ள டெலிமொங்கில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய மற்றுமொரு உள்ளூர் பெண்ணின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது, இந்த சம்பவத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

காராக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் சுஹைருல் இப்ராஹிம் கூறுகையில், பலியானவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஃபெல்டா கெமோமோயில் வசிப்பவர்கள் மாலை 4.23 மணியளவில் கண்டெடுத்தனர்.

“தொடர்ந்தும், தீயணைப்பு வீரர்கள், காவல்துறை மற்றும் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த இடத்தில் ஐந்தாவது பாதிக்கப்பட்டவரை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.

நேற்று, பகாங், பெந்தோங், டெலிமொங் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில், ஐந்து பேரைக் காணவில்லை என போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here