24 மணி நேர கோவிட் தொற்றின் பாதிப்பு 3,997 – குணமடைந்தோர் 3,894

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 3,997 கோவிட்-19 தொற்றுகள்  பதிவாகியுள்ளது. நேற்று 3,683 தொற்றுகளாக  பதிவாகி இருந்தன. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,754,513 தொற்றுகளாக உள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். 3,894 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,681,390 ஆக உள்ளது.

இதற்கிடையில், 281 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) உள்ளனர். அவர்களில் 213 பேர் கோவிட்-19 தொற்று எனவும் மற்றும் 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். ICU இல் உள்ள நோயாளிகளில், 155 பேருக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. 77 பேர் கோவிட்-19 தொற்று உறுதி செய்துள்ளனர் மற்றும் மீதமுள்ள 78 பேர் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.

இன்று 3,631 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 3,516 மலேசியர்கள் மற்றும் 115 வெளிநாட்டவர்கள் மற்றும் 335 மலேசியர்கள் மற்றும் 31 வெளிநாட்டவர்கள் அடங்கிய 366 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் உள்ளன. இதில், நோயறிதலின் போது 1.6% நோயாளிகள் மட்டுமே வகை 3, 4 அல்லது 5 இல் இருந்தனர். இன்று மூன்று புதிய கொத்துகள் பதிவாகியுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here