கோவிட் தொற்றினால் இதுவரை 31,591 பேர் பலி – நேற்றைய இறப்புகள் 31

சுகாதார அமைச்சகம் அதன் கிட்ஹப் தரவுத்தளத்தின்படி, நேற்று 31 கோவிட் -19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. முந்தைய நாள் இறப்புகள் 28 ஆக இருந்தது. இறந்தவர்களில் ஒன்பது பேர்  (BID) என வகைப்படுத்தப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை இப்போது 31,591 ஆக உள்ளது.

சமீபத்திய இறப்பு பட்டியலில் சிலாங்கூர் 9 பேர் ஜோகூர், கெடா, கிளந்தான், பேராக் மற்றும்  சபா (தலா 3), பகாங் மற்றும் பினாங்கு (தலா 2) மற்றும் நெகிரி செம்பிலான், தெரெங்கானு மற்றும் கோலாலம்பூர் (தலா 1).

மலாக்கா, பெர்லிஸ், சரவாக், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

நள்ளிரவு நிலவரப்படி, 39,682 செயலில் உள்ள தொற்றுகள் உள்ளன. இதில் 252 தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) உள்ளனர். அவர்களில் 134 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

மேலும் 2,862 பேர் குணமடைந்துள்ளனர். மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 2,769,886 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here