வெள்ள நிவாரண நிதியை பீர் விருந்துக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மூடா மறுத்துள்ளது

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 5 :

மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் (மூடா) கட்சி உறுப்பினர்களுக்கு மதுபானம் வாங்க வெள்ள நிவாரண நிதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, அதன் தலைவர் சையத் சாதிக் சையது அப்துல் ரஹ்மான் மறுத்துள்ளார்.

மூடா டி-ஷர்ட் அணிந்த ஒரு குழுவினர் அத்தகைய பானங்களை உட்கொள்வதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து, இந்த உரிமைகோரல்கள் எழுந்துள்ளது.

இதற்குப் பதிலளித்த சையத் சாதிக், வெள்ள நிவாரண நிதி அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றது, வேறு எதுவும் அந்த நிதியில் செய்யப்படவில்லை என்று வலியுறுத்தினார்.

“மதுபானங்களை வாங்குவதற்கு பொதுமக்களின் பணத்தை மூடா பயன்படுத்தவில்லை. இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு”.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி அனைத்து பரிவர்த்தனை ரசீதுகளையும் காட்டினேன்.

“மூடாவில் நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகளும் பதிவு செய்யப்பட்டு கணக்காய்விற்கு உட்படுத்தப்படும்” என்று சையத் சாதிக் நேற்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here