மலாக்கா, ஜனவரி 20 :
ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்ட ஒரு கும்பலைச் சேர்ந்த நான்குபேரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் புக்கிட் பேருவாங் மற்றும் தாமான் சௌஜானா பிரிவு 3, புக்கிட் கட்டில் ஆகிய இடங்களில் மலாக்கா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின், கிளை (டி9) போலீஸ் குழுவால் இரண்டு வெவ்வேறு சோதனைகளில் கைது செய்யப்பட்டனர்.
ஆயர்குரோ மற்றும் பத்து பெரண்டம் பகுதிகளில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான மூன்று புகார்கள் கிடைத்ததை அடுத்து, சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் வெளிநாட்டு ஆண்களையும் பெண்களையும் குறிவைத்து பணம், கைத்தொலைபேசிகள் மற்றும் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கையின் மூலமே 32 முதல் 43 வயதுடைய நான்கு சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்தது என்று அவர் கூறினார்.
“கைது செய்யப்பட்டபோது, சந்தேக நபர்களில் ஒருவர் குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மறைந்திருந்தார், எனவே காவல்துறை தீயணைப்புப் படையின் உதவியை நாட வேண்டியிருந்தது,” என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
“ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், மேலும் மூன்று சந்தேகநபர்கலாய் போலீஸ் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களுக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
“ஆரம்ப சிறுநீர் பரி சோதனையின் முடிவுகளிலும் சந்தேக நபர்கள் மெத்தம்பேட்டமைன் சாதகமாக இருப்பதைக் கண்டறியப்பட்டது ,” என்று அவர் கூறினார்.
கிறிஸ்டோபர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டதன் மூலம், அந்தக் குழு சம்பந்தப்பட்ட மூன்று கொள்ளைச் சம்பவங்களை போலீசார் தீர்த்து வைத்துள்ளனர் என்றார்.
“சந்தேக நபர்களை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து இரண்டு வாகனங்கள், இரண்டு கத்திகள், ஒரு கைத்தொலைபேசி மற்றும் ஆடைகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 394 மற்றும் அதே சட்டத்தின் 395/397 இன் படி விசாரணையில் உதவுவதற்காக அவர்கள் அனைவரும் நாளை வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.




















