இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 22 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

தைப்பிங், ஜனவரி 21 :

கடந்த டிசம்பரில், இளம்பெண் ஒருவரை உடல்ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக, வேலையில்லாத ஒருவர், செஷன்ஸ் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட முகமட் நசிருடின் ஏ. ரஹ்மான், 22, என்ற ஆடவரும் எதிராக, நீதிபதி சித்தி நோரைடா சுலைமான் முன்னிலையில் இரண்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றமற்றவர் என்று கூறி, விசாரணை கோரினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அந்த நபர் உடலுறவில் ஈடுபட்டதாகவும் அப்பொழுது அந்த பெண்ணுக்கு வயது 13 என்றும் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை, செலாமா, ஜாலான் லாம்பினில் உள்ள செம்பனைத் தோட்டப் பகுதியில், தோயோத்தா அவான்சா காரில் இரண்டு குற்றங்களும் செய்யப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 (சட்டம் 792) பிரிவு 14 (a) மற்றும் பிரிவு 14 (b) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படிகளும் வழங்க வழி செய்கிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

வழக்கை வழக்கறிஞரை நியமிப்பது உட்பட, பிப்ரவரி 21 ஆம் தேதியை வழக்கின் மறு தேதியாக நிர்ணயித்ததுடன், குற்றம் சாட்டப்பட்டவரை RM15,000 ஜாமீனில் செல்ல நீதிபதி அனுமதித்தார்.

செலாமாவில் நடந்த சம்பவத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் தனக்குத் தெரிந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்பட்ட ஒருவரை ஜனவரி 11 ஆம் தேதி போலீசார் கைது செய்ததாக ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here