MySejahtera பயனர்கள் தங்கள் உடல்நிலை குறித்த புதுப்பிப்பைச் சமர்ப்பிக்கும்போது, அவர்களின் கோவிட்-19 சோதனை முடிவுகளின் ஸ்னாப்ஷாட்டைச் சேர்க்க வேண்டும்.
முன்னதாக, கோவிட்-19 சுய-பரிசோதனை அறிக்கையை உருவாக்கும் போது பயனர்கள் டிஜிட்டல் படிவத்தை மட்டுமே நிரப்ப வேண்டும் மற்றும் அவர்களுக்கு கோவிட் தொற்று உள்ளதா? இல்லையா? அல்லது அவர்கள் எடுத்த சோதனை தவறானதா என்பதை அறிவிக்க வேண்டும்.
இப்போது பயனர்கள் தங்கள் கோவிட்-19 சோதனை முடிவுகளின் ஸ்னாப்ஷாட்டைச் சேர்த்து, சோதனை எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
பிப்ரவரி 17 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய நெறிமுறையின் அடிப்படையில், நெருங்கிய தொடர்புகள் பூஸ்டர் டோஸைப் பெற்றிருந்தால் ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு சுய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, இன்னும் பூஸ்டர் டோஸ் பெறாதவர்கள் ஏழு நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும். முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.