கோலாலம்பூர், தீயணைப்பாளர்களின் துரித நடவடிக்கையால் இங்குள்ள தாமான் தேசாவில் உள்ள ஒரு கடை வீட்டில் சிக்கிக் கொண்ட இருவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் இன்று காலை 10.23 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது.
செபூத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் (பிபிபி), ஜலான் ஹாங் துவா பிபிபி, புக்கிட் ஜலில் பிபிபி மற்றும் வாங்சா மஜு பிபிபி ஆகியவற்றிலிருந்து ஆறு வாகனங்களுடன் மொத்தம் 35 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காலை 10.28 மணிக்கு அந்த இடத்திற்கு வந்த உறுப்பினர்கள், மூன்றாவது மாடியில் உள்ள ஒரு கடை வீடு கட்டிடத்தில் தீப்பிடித்ததைக் கண்டனர். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பாதிக்கப்பட்ட இருவர் வளாகத்திற்குள் சிக்கியுள்ளனர். மேலும் அவர்கள் கட்டிடத்தின் ஓரத்தில் நிறுவப்பட்ட படிக்கட்டுகளைப் பயன்படுத்தி மீட்கப்பட்டனர் என்று அவர் இங்கே ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காலை 10.46 மணியளவில் தாக்குதல் மற்றும் தற்காப்பு முறைகளை பயன்படுத்தி தீயை தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக தீயை கட்டுப்படுத்தினர். கடை வீடு 100% சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை, தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் கூறினார்.