கோலாலம்பூர், மார்ச் 28 :
இங்குள்ள ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் (TAR) தங்கக் கடையில், மார்ச் 23ஆம் தேதி அன்று கொள்ளையடிக்கப்பட்டதில், முக்கிய மூளையாக இருந்தவர், இன்று காலை பேராக்கின் தைப்பிங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த சோதனையில் கைது செய்யப்பட்டார்.
டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா கூறுகையில், தைப்பிங்கின் தாமான் அஓர் ஜெயாவில் உள்ள ஹோட்டலில், காலை 4.30 மணிக்கு, டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவுக் குழுவால் 40 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அவர் அளித்த தகவலின்படி, அவரது சேமிப்புக் கிடங்கில் இருந்த 12 குழந்தைகளின் கொலுசுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
“பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவ மேலும் நான்கு சந்தேக நபர்களை நாங்கள் தடுத்து வைத்தோம்.
“இதுவரை, 29 மற்றும் 49 வயதிற்குட்பட்ட முக்கிய மூளைக்காரன் உட்பட ஐந்து சந்தேக நபர்கள், வழக்கு விசாரணையில் உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நூர் டெல்ஹான் கூறுகையில், இந்த சம்பவத்தில் திருடப்பட்ட மற்ற நகைகள் தொடர்பில், டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு இப்போது தீவிரமாக கண்காணித்து வருகிறது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 392 மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 397 இன் படி அனைத்து சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.
ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள தங்கக் கடை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் நபரை போலீசார் தேடி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
துணியால் சுற்றப்பட்ட இரும்புக் கம்பியால் நகைக் காட்சிப் பெட்டியை உடைத்து, ஒருவர் அந்த வளாகத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த நபர் ஹோண்டா டேஷ் ரக மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி தப்பிச் சென்றார்.