மிரி, ஏப்ரல் 25 :
நேற்று இரவு, கம்போங் ஈரான் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணாமல் போன 88 வயது மூதாட்டி, தனது சொந்த வீட்டிலிருந்து 91 மீட்டர் தொலைவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
பத்து நியா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) தலைவர் ராரி பிஞ்சி கூறும்போது, பாதிக்கப்பட்டவர் தேமா அப்துல்லா, 88, என அடையாளம் காணப்பட்ட அந்த மூதாட்டி, அவரது வீட்டிலிருந்து 91 மீட்டர் தொலைவில் உள்ள கம்போங் ஈரான், எண்ணெய் பனை தோட்டப் பகுதியில், இரவு 9.17 மணியளவில் தேடல் மற்றும் மீட்பு (SAR) குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
“பாதிக்கப்பட்டவர் பலவீனமான நிலையில் காணப்பட்டார், ஆனால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. எண்ணெய் பனை தோட்டப் பகுதியிலிருந்து தீயணைப்பு வீரர்களில் ஒருவரால் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டார்,” என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், சம்பந்தப்பட்ட மூதாட்டி நேற்று மாலை 3 மணியளவில் வனப்பகுதிக்குள் நுழைவதைக் கண்டனர். ஆனால் “அவர் முன் இரவு வரை அவர் வீடு திரும்பாததால், மூதாட்டி காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
“சம்பந்தப்பட்ட மூதாட்டியை கண்டறிய ஒரு சிறப்பு தேடல் நடவடிக்கையை நடத்துவதற்கு, இரவு 8.22 மணிக்கு சம்பவம் தொடர்பாக பத்து நியா தீயணைப்பு நிலையத்திற்கு அழைப்பு வந்தது,” என்று அவர் கூறினார்.