புத்ராஜெயா, மே 8 :
துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ கமாருடின் ஜாஃபர், மே 8 முதல் 11 வரை ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்த விஜயத்தின் போது, அவர் தற்போதைய பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியாவை சந்தித்து கருத்துகளை பரிமாறிக்கொள்வதற்கும், மலேசியா மற்றும் காமன்வெல்த் நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை மே 10-ம் தேதி லண்டனில் துணை அமைச்சர் வரவேற்பார் என்றும், லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தில் நடைபெறும் “Tenun Pahang: Weaving Hope” கண்காட்சிக்கு இருவரும் வருகையளிப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சி மே 9 முதல் 15 வரை நடைபெறும் லண்டன் கிராஃப்ட் வீக்குடன் இணைந்ததாகும்.
அத்தோடு லண்டனில் உள்ள மலேசிய குடும்பத்துடன் இணைந்த Sambutan Hari Raya நிகழ்வில் கமாருடினும் பிரதமருடன் பங்கேற்பார் என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.