60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்களில் 11,000க்கும் மேற்பட்டோர் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்

பெட்டாலிங் ஜெயா, மே 13 :

புதன்கிழமை (மே 11) நிலவரப்படி, தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 11,653 பெரியவர்கள் தன்னார்வமாக இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களும் கோவிட்-19 பூஸ்டரின் இரண்டாவது டோஸை அவர்களின் முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நான்கு முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு பெறலாம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்ததைத் தொடர்ந்து, முதியோருக்கான இந்த இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here