பாகன் செராய், மே 21 :
எதிர்வரும் மே 31 ஆம் தேதி அன்று முடிவடைய உள்ள குழந்தைகளுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தை (PICKids) நீட்டிக்க சுகாதார அமைச்சகம் (MOH) திட்டமிடவில்லை என்று துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி கூறினார்.
தங்கள் குழந்தைகளை இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு மலேசிய சுகாதார அமைச்சு பெற்றோருக்கு போதுமான அவகாசம் அளித்துள்ளது, எனவே இதன் பிறகு, தடுப்பூசியை தனியார் கிளினிக்குகளில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
“இதுவரை, PICKidsயை நீட்டிக்கும் திட்டம் எங்களிடம் இல்லை. இது மே 15 அன்று முடிவடைய இருந்தது, ஆனால் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ”என்று அவர் செக்கோலா மெனெங்கா கேபாங்சானின் (SMK) அபுபக்கர் அல் பகீரின் பெற்றோர்-ஆசிரியர் சங்க (PTA) ஆண்டு பொதுக் கூட்டத்தைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
























