Perai வட்டாரத்தில் நடந்த சண்டை குறித்து போலீசார் விசாரணை

பட்டர்வொர்த் perai வட்டாத்தில் உள்ள சாய் லெங் பூங்காவில் உள்ள நாசி காண்டார் உணவகம் முன் ஒரு குழுவினர் சண்டையிட்ட சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Seberang Perai Tengah (SPT) மாவட்ட போலீஸ் தலைவர் ACP டான் செங் சான் கூறுகையில், சண்டை அதிகாலை 3.30 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது. மேலும் அவர்கள் ஒருவரையொருவர் தாக்க பல பொருட்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தினர்.

இன்று, ஃபேஸ்புக்கில் 8 முதல் 23 வினாடிகள் நீடிக்கும் நான்கு வைரல் வீடியோக்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். இது ஒரு நாசி காண்டார் உணவகத்தின் முன் தனிநபர்கள் குழு சண்டையிடுவதைக் காட்டுகிறது.

இதுவரை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களையும் சண்டைக்கான காரணத்தையும் கண்டுபிடிப்பதற்கான விசாரணை இன்னும் தொடர்கிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக் ஹெங் பூன் அவுனை 011-35235498 அல்லது 04-5382222 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது என்றார். குற்றவியல் சட்டம் பிரிவு 148ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here