ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 30 :
இங்குள்ள கங்கார் தெப்ராவ்வில் உள்ள ஒரு வீட்டில், நேற்று நடத்திய சோதனையின் போது கெத்தும் நீர் கொண்ட 110 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இருவரையும் கைது செய்தனர்.
தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ரவூப் சிலாமாட் கூறுகையில், நேற்று மாலை 5.30 மணியளவில், போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு, தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) உறுப்பினர்கள் ஆகியோர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 25 மற்றும் 28 வயதுடைய ஆண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
“கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மது அருந்துவதற்காக சோதனை நடந்த இடத்திற்கு வந்ததாக நம்பப்படுகிறது. சோதனையின் போது அங்கு இல்லாத சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரை நாங்கள் இன்னும் தேடி வருகிறோம் என்றார்.
“1.2 லிட்டர் எடையுள்ள 13 போத்தல்கள் இருமல் மருந்து திரவம் அடங்கிய பையையும் நாங்கள் கைப்பற்றினோம்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ரவூப்பின் கூற்றுப்படி, சந்தேக நபர்களில் ஒருவருக்கு போதைப்பொருள் தொடர்பான கடந்தகால குற்றவியல் பதிவும் உள்ளதாகவும் விசாரணைக்கு உதவும் வகையில் சந்தேகநபர்கள் இருவரும் செப்டம்பர் 2ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
இந்த வழக்கு விஷம் சட்டம் 1952 பிரிவு 30 (3) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.