குயின் எலிசபெத் உடல் லண்டன் வந்தது.. கண்ணீரில் பொதுமக்கள்.. இறுதி அஞ்சலிக்கு தயாராகிறது பிரிட்டன்

லண்டன்: ராணி எலிசபெத் உடல் லண்டனில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ள நிலையில், இறுதி அஞ்சலிக்கு இங்கிலாந்து தயாராகி வருகிறது. இங்கிலாந்து நாட்டை கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்த ராணி 2ம் எலிசபெத் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.

இவரது இறுதி சடங்கு வரும் 19ம் தேதி, காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.. அரச குடும்பத்தினர் மரியாதை செலுத்துவதற்காக எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் அரசியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here