மழைக்காலத்தில் கொரோனா பரவல் வேகமெடுக்கும்

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக அமெரிக்காவின் கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரி ஆஷிஷ் ஜா தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஆஷிஷ் ஜா, அமெரிக்காவில் மழைக்காலத்தில் கொரோனா பரவல் வேகமெடுக்கும் என்று கூறினார். இதனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக இருப்பதால், தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய ஆஷிஷ் ஜா, உலகின் முக்கியமான தடுப்பூசி உற்பத்தியாளராக இந்தியா உள்ளது என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here