கிரைப் வாட்டரால் (Gripe water) குழந்தைகள் உயிருக்கு ஆபத்தா? – மருத்துவ விளக்கம்

`குழந்தைகளுக்கு கிரைப் வாட்டரை கொடுப்பது விஷம் கொடுப்பதற்குச் சமம்’ என்ற எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள்நல மருத்துவர் அருண் பாபு திருநாவுக்கரசின் சமீபத்திய  டுவீட் தாய்மார்களிடையே அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

`பொதுவாகவே கிரைப் வாட்டரில் எந்தவொரு மருத்துவ குணமும் கிடையாது என்பதே உண்மை. கிரைப் வாட்டரை கண்டுபிடித்தவர் வுட்வர்ட் என்பவர். 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பெருமளவில் கொசுக்களால் மலேரியா நோய் பரவியது. இதற்காக Quinine என்ற மருந்தை வுட்வர்ட் கண்டுபிடித்தார். இந்த quinine-ன் மூலப்பொருள்களில் ஒன்றுதான் கிரைப் வாட்டர்.

உண்மையான உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டரில் தண்ணீர், வெந்தய எண்ணெய், சோடியம் பைகார்பனேட், சர்க்கரை மற்றும் 3.6% ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதால் இதற்கு “கிரைப் – சீரண” என்ற பெயரை வைத்தார் உட்வர்ட்ஸ். ஆனால் நவீன காலங்களில் மருத்துவர்கள், பெற்றோர்கள் இதில் சேர்க்கப்படும் ஆல்கஹாலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அது கைவிடப்பட்டது. சில பிராண்ட்கள் இதில் செயற்கை சர்க்கரைகளை சேர்க்கின்றனர். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் நாட்டிற்கு நாடு உற்பத்தியாளர்களை பொருத்து வேறுபடுகிறது.

மருத்துவத்துறையில் கிரைப்பிங் (Gripping) என்றால் வயிற்றுவலி என்று பொருள். இதுதான் இப்போது அது மருவி colic என்று அழைக்கப்படுகிறது. கிரைப் வாட்டரில் ஆல்கஹால் அளவு சற்று அதிகமாக இருக்கும். அதாவது இதிலுள்ள 3.6 %ஆல்கஹால் என்பது குழந்தைகளுக்கு நல்லது அல்ல. இதில் சேர்க்கப்படும் ஆல்கஹால் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது மட்டுமல்லாமல் அறிவியலின்படி குழந்தைகள் கிரைப் வாட்டருக்கு அடிமையாகவும் அல்லது பின்னர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகவும் ஆகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரைப் வாட்டரில் வயிற்றில் உள்ள உப்புசத்தை வெளியேற்ற சோடா மாவை (Sodium bicarbonate) பயன்படுத்தத் தொடங்கினர். இப்படி ஆல்கஹால் மற்றும் சோடா மாவைக் கலந்து குடிக்கும்போது பொதுவாகவே ஏப்பம் வரும். அதன்பின்னர் ஆல்கஹாலினால் குழந்தைகள் தூங்கிவிடுவர்.

1993 ல் அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டரை வணிக ரீதியாக விற்பனைக்கு கொண்டு வந்தது. மேலும் நவீன காலங்களில் அதில் பராபன்ஸ், வெஜிடபிள் கார்பன், பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், ஆல்கஹால், சோடியம் பைகார்பனேட், புதினா எண்ணெய், மெந்தால் ஆகியவற்றை சேர்க்கின்றனர். இவைகள் குழந்தைகளுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே இந்த பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது தான் நல்லது. இந்த மாதிரியான கலப்படம் இல்லாத பிராண்ட் கிரைப் வாட்டரை மட்டும் பயன்படுத்துங்கள். லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை பொருத்து குழந்தைகளுக்கு உபயோகியுங்கள்.

சோடியம் பைகார்பனேட் (பேக்கிங் சோடா) இவையும் சேர்க்கப்படுகிறது. இவை இந்தியாவில் சர்க்கைக்ஷாரா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. உங்கள் குழந்தை அமிலத் தன்மை பிரச்சினைக்காக அழுதால் அதற்கு இது தீர்வளிக்கும். ஆனால் அதிகப்படியான சோடியம் பைகார்பனேட் மில்க் – ஆல்கலி என்ற நோய் தாக்குதலை ஏற்படுத்துகிறது. இது என்னவென்றால் உங்கள் குழந்தைகள் குடிக்கும் பாலில் உள்ள கால்சியம் சத்து இந்த அதிகப்படியான சோடியம் பைகார்பனேட் காரத்தால் அவர்களின் இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கிறது. எனவே ஆறு மாத குழந்தைகள் எப்பொழுதும் தாய்ப்பால் குடிப்பதால் இதை நீண்ட நாட்கள் அவர்களுக்கு கொடுக்கும் போது நாளடைவில் சிறுநீரக பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது எனவே ஆறு மாத குழந்தைகளுக்கு, மற்றும் சிறுநீரக பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் வெந்தயம் மற்றும் பெருஞ்சீரக விதை எண்ணெய் இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய்கள் குழந்தைகளின் சீரண சக்திக்கு உதவுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. வயிறு வலியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது நிவாரணம் அளிக்கிறது. ஆனால் சில இது குழந்தைகளுக்கு இது அலற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் சேர்க்கப்படும் சர்க்கரை வயிறு வலியால் துடித்து அழகின்ற குழந்தையை முதலில் அமைதிப்படுத்த உதவுகிறது. ஆனால் அதிகப்படியான சர்க்கரை அவர்களுக்கு வயிற்று புழுக்கள், பற்சொத்தை போன்ற பிரச்சினைகள் ஏற்படக் காரணமாக கூட அமைகிறது. எனவே கிரைப் வாட்டர் கொடுப்பதற்கு முன் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சர்க்கரையின் அளவை பார்த்து விட்டு குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

கிரைப் வாட்டர் வயிற்று வலியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது என்பதற்கு எந்த வித ஆராய்ச்சி சான்றுகளும் இல்லை. ஆனால் தற்காலிகமான மருந்தாக செயல்படுகிறது என்கின்றனர்.

இவற்றால் பெரும்பாலும் வயிற்று போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. ஆனால் 2007 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சில பிராண்ட் கிரைப் வாட்டரில் வயிற்று போக்கை ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளான க்ரிப்டோஸ்போரிடியம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் வயிற்று போக்கிற்கும் கிரைப் வாட்டர்க்கும் நேரடி தொடர்பு இல்லை. உற்பத்தியாளர்களை பொருத்தே இது ஏற்படுகிறது. கிரைப் வாட்டரில் கலக்கப்படும் செயற்கை சர்க்கரை, சோடியம் பைகார்பனேட், ஆல்கஹால் இவற்றால் மற்றுமே பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. எனவே இந்த பொருட்கள் இல்லாத கிரைப் வாட்டர் பிராண்டை பயன்படுத்துங்கள்.

ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது நல்லது. இவை அவர்களின் சீரண மண்டலம் நன்றாக வளர்ச்சி அடைய உதவும். எனவே இந்த மாதிரியான பிரச்சினை சமயத்தில் ஃபார்முலா மில்க்கிற்கு பதிலாக தாய்ப்பால் மட்டுமே கொடுங்கள். ஆறு மாதக் குழந்தைக்கு கிரைப் வாட்டர் கொடுத்தால் குடலில் பாக்டீரியாக்கள் பெரு வாய்ப்புள்ளது. எனவே அதை தவிருங்கள்.

கடைகளில் விற்கப்படும் கிரைப் வாட்டருக்கு பதிலாக அதில் சேர்க்கப்படும் பொருட்களை கொண்டு நீங்களே வீட்டில் கிரைப் வாட்டர் தயாரித்து அவ்வப்போது கொடுங்கள். இது மற்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்றும்.

எனவே இனி கிரைப் வாட்டர் பயன்படுத்தும் முன் அதில் சேர்க்கப்படும் பொருட்களை அறிந்து கொண்டு மேலும் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பின்னர் பயன்படுத்துவது சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here