கோலாலம்பூர்: இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் தங்க நகையைப் பறித்த குற்றத்திற்காக, பொருள் விநியோகஸ்தருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அந்த நபர் தனது குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து 41 வயதான ஜூலிசான் ஜோஹாரிக்கு நீதிபதி டத்தோ நூமான் மஹ்மூத் ஜூஹூடி தண்டனை விதித்தார்.
மேலும், செப்டம்பர் 23-ம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து குற்றவாளிக்கு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நூமான் உத்தரவிட்டார்.
செப்டம்பர் 20 ஆம் தேதி இரவு 9 மணியளவில் பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஜாலான் கிளாங் லாமாவில், துப்புரவுத் தொழிலாளியான ஷலீனா முகமது ஷா, 49 என்பவரிடம், கொள்ளையடித்து அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் தங்க நகையைப் பறித்துச் சென்றதாக ஜூலிசன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் 392 ஆவது பிரிவின் கீழ், அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி தண்டனை விதிக்கப்படும்.
வழக்கின் உண்மைகளின்படி சம்பவத்தன்று, குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணின் கழுத்தை நெரித்து, பாதிக்கப்பட்டவரிடமிருந்து RM10,000 மதிப்புள்ள தங்க நகையைத் திருடினார்.ன்விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் நகைக் கடையில் நகையை 5,500 ரிங்கிட்க்கு விற்றது தெரியவந்தது.
பிரதி அரசு வழக்கறிஞர் அப்துல் காலிக் நசெரி, குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாத நிலையில் வழக்கை நடத்தினார்.