கோலாலம்பூர்:
பேராக்கின் லுமூட் நகரில் அரச கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 10 அதிகாரிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் நல்லுடல் நேற்று வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மாண்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2,800 வெள்ளி நிதியுதவி அளிக்கப்படும் என தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மாண்ட அதிகாரிகளின் இறுதிச் சடங்குகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மலேசியாவின் 90வது கடற்படைத் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்த ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, விபத்து நிகழ்ந்ததாக தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.